மக்களவை சபாநாயகர் இவரா? நிதிஷ்குமார் கடுமையாக எதிர்க்க காரணம் என்ன?

Siva

புதன், 12 ஜூன் 2024 (16:47 IST)
பாராளுமன்ற முதல் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் புதிய மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
 
மக்களவையில் புதிய சபாநாயகர் பதவிக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தா என்பவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நிதிஷ்குமார் கட்சியில் நீண்ட காலமாக எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் 99, 2004, 2009, 2014, 2019 என தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் சமீபத்தில் இவ்வாறு பிஜு ஜனதாதள கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் 17வது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரங்களில் சபையை  சிறப்பாக நடத்தி செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 18 வது மக்களவை சபாநாயகர் பதவிக்கு பர்த்ருஹரி மஹ்தா என்பவரை முன்னிறுத்த பாஜக திட்டம் இல்லாத நிலையில் தன்னுடைய கட்சியில் இருந்து சென்றவருக்கு சபாநாயகர் பதவியா? என நிதிஷ்குமார் எதிர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்