ரயில் மோதி எத்தனை யானைகள் பலி: ஆர்.டி.ஐ-ல் பகீர்!

புதன், 1 டிசம்பர் 2021 (16:34 IST)
கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

 
மங்களூர்  - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணியளவில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. கேரளாவில் இருந்து வந்துக்கொண்டிருந்த ரயில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற 3 யானைகள் மீது கடந்த வாரம் மோதியது. இதில் சுமார் 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 
 
இந்நிலையில் ரயில்கள் மோதியதில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்