மாசுபாடு அதிகரிப்பு … பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து 16 வயது சிறுமி தற்கொலை !

புதன், 19 ஆகஸ்ட் 2020 (21:34 IST)
இந்திய நாட்டில் சுற்றுச் சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளதாக கூறி பிரதம மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பலில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த் 16 வயது சிறுமி, இந்தியாவில் நிலவும் ஊழல் மற்றூம் அதிகரித்து வரும் மாசு ,அழியும் காடுகளைப் பற்றி கவலை தெரிவித்து ஒரு 16 பக்கத்திற்கு கடிதம் எழுதிவைத்து தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுதந்திர தினத்தன்று சிறுமி இந்த விபரீத முடிவெடுத்ததாகத் தெரிகிறது. மேலும்  வரும் தீபாவளியன்று  பட்டாசு வெடிக்க தடை விதிக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமியின் இந்த முடிவு அவரது குடும்பத்தினருக்கும், அந்தப் பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக சிறுமி கிரேட்டா தன்பெர்க் ஐநா சபையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்