சென்செக்ஸ் தொடர் வீழ்ச்சி: பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்!

புதன், 11 மே 2022 (11:44 IST)
பங்குசந்தை தொடர்ச்சியாக சரிவில் இருக்கும் காரணத்தினால் ஏராளமான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் 54050 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகள் சரிந்து 16150 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்