மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் மற்றும் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய விவகாரம் என தொடர்ந்து அவையில் அமளி ஏற்பட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவையில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அவை கூடியவுடன், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து, குளிர்கால கூட்டத்தொடர் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.