ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி சென்செக்ஸ் நிலவரம் என்ன?

Siva

வெள்ளி, 30 மே 2025 (11:35 IST)
இந்தியா பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று காலை சரிவுடன் பங்குசந்தை வர்த்தகம் தொடங்கியது. அதன் பின்னர், மதியத்திற்கு மேல் திடீரென உயர்ந்தது.
 
இந்த நிலையில், இன்று மீண்டும் சரிவுடன் பங்குசந்தை தொடங்கிய நிலையில், மதியத்திற்கு மேல் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 165 புள்ளிகள் குறைந்து, 81,439 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குசந்தை நிப்பிட்டி 65 புள்ளிகள் குறைந்து, 24,774 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குசந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்