சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், 2026-27 கல்வியாண்டு முதல், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது.