இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்கு பின்னர் இன்று பங்கு சந்தை சற்று உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சந்தை வர்த்தகம் ஆரம்பத்திலிருந்து இன்று ஏற்றத்தில் இருந்து வருகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்து 76,274 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 89 புள்ளிகள் உயர்ந்து 23,035 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் டாட்டா ஸ்டீல், ஹீரோ மோட்டார்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி வங்கி, டைட்டான், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், மாருதி, இன்ஃபோசிஸ், சன் பார்மா, இந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, சிப்லா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.