அ.தி.மு.க., வேட்பாளர் மு.தம்பிதுரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (20:24 IST)
வருகின்ற 18 ம்தேதி 17 பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மு.தம்பிதுரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இன்று காலை முதல் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட காந்திகிராமம், ராமாகவுண்டனுார், வடக்கு காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருடன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க  எம்.எல்.ஏ., கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்