அவசர ஆலோசனையில் ரஜினி: அடுத்த திட்டம் என்ன?

வியாழன், 23 மே 2019 (11:21 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தோடு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் என்னென்ன முடிவுகள் எடுத்திருக்கிறார் என்பதை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்