என்னத்தான் தாண்டவமாடினாலும், அவருக்கு பெயர் சொல்லும் ஒரேயொரு ஹிட்டுதான் உள்ளது, சென்னை பட்டணம். சமீபத்தில் அவர் தொட்டதெல்லாம் மண்ணாக, தீர யோசித்து மீண்டும் சரித்திரப் படமெடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். இந்த கில்லடினுக்கு தலையை கொடுக்க சம்மதித்திருப்பவர் நமது தனி ஒருவன்.
இங்கே கதை இப்படியென்றால் துஷ்டன் படம் எடுத்த வர்தன் இயக்குனரின் நிலை இன்னும் மோசம். கோடீஸ்வரனை நிறுத்தினால் லட்சாதிபதியாக்கும் சனி திசை ஓடுகிறது இயக்குனருக்கு. கடைசியாக எடுத்த துஷ்டன், படப்பிடிப்பில் போட்ட சாப்பாட்டுக்கு கூட வசூலிக்கவில்லை. அவரும் இப்போது சாரித்திரத்தில் சரண்டராகியிருக்கிறார். பிரபல குமார இயக்குனருடன் இணைந்து சரித்திர கதை எழுதி வருகிறார் தனது புதிய படத்துக்கு.