விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பாரா தோனி?

வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:40 IST)
தன் மீதான விமர்சனங்களுக்கு இன்றைய போட்டியில் தோனி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 44வது போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து ஐதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் என உயர்ந்தாலும் அதே எட்டாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தோனி இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதாகவும் இம்முறை அவரது பேட்டிங் சரியில்லை என விமர்சனம் வெளியான நிலையில் இன்றைய அவர் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்