வடலூர் வள்ளலார் கோவிலில் ஜோதி தரிசன விழா.. தேதி அறிவிப்பு!

செவ்வாய், 31 ஜனவரி 2023 (20:12 IST)
வடலூர் வள்ளலார் கோவிலில் ஜோதி தரிசன விழா பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது என்பதும் ஒவ்வொரு மாதமும் தைப்பூசம் தினத்தன்று அங்கு ஜோதி தரிசனம் நடைபெறும் என்றும் தெரிந்ததே. 
 
கண்ணாடிக்கு முன்னால் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதியை தரிசிப்பதே ஜோதி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஆண்டு 152வது ஆண்டாக ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது என்றும் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை திருவருட்பா பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்றும் பிப்ரவரி 5ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்