நவகிரகங்களில் பலருக்கும் அதிக பயத்தை தரும் கிரகம் சனி. இது ஜாதகத்திலோ, தசாபுக்தியிலோ, கிரகப்பெயர்ச்சியிலோ எந்த விதத்திலாக இருந்தாலும், அதன் தாக்கம் நிச்சயமாக தீவிரமாகவே இருக்கும். "கெடுக்கும் சனியே கொடுக்கவும் செய்வான்" என்று சொல்லப்படினும், இவரது பெயரே பலருக்கும் குழப்பத்தையும் பயத்தையும் தரும், ஏனெனில் இவர்தான் ஆயுள்காரன்.
சனிதோஷத்தால் ஏற்படும் விளைவுகளில் சில: முயற்சிகளில் தடைகள், முன்னேற்றத்தில் தடைகள், பணிச்சுமை அதிகரிப்பு, அரசு வழியில் தடை, தொழிலில் நெருக்கடி, சோம்பல் அதிகரித்தல், உடல் நலக்குறைவு, விபத்துகள் போன்றவை. குறிப்பாக, தோல் நோய், எலும்பு தொடர்பான பிரச்சனைகள், நரம்பியல் சிக்கல்கள், சர்க்கரை நோய் போன்றவை வரக்கூடும்.
சனிதோஷ நிவர்த்திக்கான பரிகாரங்கள்:
தினமும் ஒரு கைப்பிடி அன்னத்துடன் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு போடுவது.