ஆனந்தவல்லி சோமநாதர் கோவில்: இலங்கைக்கு செல்லும் முன் ராமர் வழிபட்ட ஆலயம்..

Mahendran

சனி, 17 மே 2025 (17:25 IST)
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையுள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று வகையிலும் சிறப்பு பெற்றது. சந்திர பகவான் சிவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலமாக இது கருதப்படுகிறது.
 
இங்கு மூலவராக சோமேஸ்வரர், உற்சவராக சோமநாதர், அம்பாளாக ஆனந்தவல்லி தாயார் உள்ளார்கள். சந்திரன், தனது இரண்டு மனைவிகள் ரோகிணி, கார்த்திகையுடன் ஒரே கல்லில் சிற்பமாக உள்ள தனிச்சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. வெள்ளை நிறத்தில் விளங்கும் லிங்கம், சந்திரனால் அபிஷேகம் செய்யப்பட்டதின் அடையாளம்.
 
பழங்காலத்தில் மீனாட்சி மற்றும் சொக்கநாதர் சிலைகள் இரண்டு ஆண்டுகள் இங்கு பாதுகாக்கப்பட்டிருந்தது என்பது வரலாற்றுச் சான்று. மேலும் ராமர் இங்கு வழிபட்டு இலங்கைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
ஐந்து நிலை ராஜகோபுரம், தல விருட்சமாக வில்வ மரம், தீர்த்தமாக சந்திர புஷ்கரணி, சிற்பங்கள் ஆகியவை இக்கோவிலின் அழகு. சித்திரை, ஆடி, மார்கழி போன்ற மாதங்களில் விசேஷ திருவிழாக்கள் நடைபெறும்.
 
கோவில் தினமும் காலை 6 மணி முதல் 11.30 வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். மதுரை-ராமநாதபுரம் சாலையில் 50 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.
 
இந்த தலம், பக்தர்களுக்கு அருள் அளிக்கும் புனித ஸ்தலமாகத் திகழ்கிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்