தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளதைப் போல, அய்யப்பனுக்கும் 6 முக்கிய கோவில்கள் உள்ளன. அவற்றை "அய்யப்பனின் அறுபடை வீடுகள்" என்று அழைக்கலாம். அய்யப்பனின் அறுபடை வீடுகள் குறித்த தகவல்கள் இதோ:
3. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஊரில், அய்யப்பன் ராஜசுகமான நிலையில், ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார்.
4. அச்சன் கோவில்: செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் பழமையானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு, வனராஜனாக அமர்ந்த அய்யப்பன், கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி தருகிறார்.
6. குளத்துப்புழா: செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ள இந்த கோவிலில், அய்யப்பன் குழந்தையாக இருக்கும் நிலையில் "பால சாஸ்தா" என அழைக்கப்படுகிறார். இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையக்கூடிய அளவுக்கு கட்டப்பட்டிருக்கிறது.
சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்கள், அய்யப்பன் அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால், சிறந்த பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.