அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது, ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மயானத்தில் ஆடு, கோழி பலியிடப்பட்டு, பிரசாதமாக சுண்டல், கொழுக்கட்டை வழங்கப்பட்டது.
குழந்தை பெற்ற பெண்கள், குழந்தையை சூறை விட்டு, அம்மனுக்கு நன்றி தெரிவித்து காணிக்கை செலுத்தினர். முன்னோர்களுக்கு விருப்ப உணவுகள், குவாட்டர் பாட்டில், சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.