ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தம், நெல்லிக்காய் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். நெல்லிமரம் இருந்தால் அதையும் வழிபடலாம்.
விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் அரிசி உணவை தவிர்க்க வேண்டும். பழங்கள், நீர் ஆகாரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உப்பை தவிர்ப்பது நல்லது. மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம், மகாவிஷ்ணுவின் அருளையும், வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது இந்து மத நம்பிக்கையாகும்.