பெரிய நம்பிக்கையோட வந்தோம்.. ஆனா மொத்தமா சொதப்பிட்டோம்! ஜாஸ் பட்லர் வேதனை!

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (13:35 IST)
உலக கோப்பையில் மோசமாக தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் வேதனை தெரிவித்துள்ளார்.



ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தோல்வி முகமே காணாமல் தொடர் வெற்றியில் முதலிடத்தில் உள்ள நிலையில் பல்வேறு அணிகளும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டமாக நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இந்த போட்டிகளில் மோசமான நிலையை அடைந்துள்ளது.

சிறிய கிரிக்கெட் அணியான நெதர்லாந்து கூட ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாக தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து அணி.

இது குறித்து பெரும் வேதனையுடன் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஷ் பட்லர் “இந்த தொடர் தோல்வி எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிகப்பெரும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு லண்டன் நாங்கள் இந்தியாவிற்கு வந்தோம். ஆனால் அதற்கான நியாயத்தை எங்கள் அணி சரியாக செய்யவில்லை. நான் சிறப்பாக ஆடாததால் அணியும் பின் தங்கிவிட்டது. சிறப்பான பயிற்சிகளின்மூலம் அடுத்த போட்டியில் நன்றாக விளையாட முயற்சிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்