சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த கோலி!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (08:49 IST)
இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு இதே நாளில்தான் தனது 19 வயதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று வடிவக் கிரிக்கெட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரராக இருக்கிறார்.

15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கோலிக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து மழைப் பொழிந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்