தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்! ஓய்வு கேட்டுள்ள கோலி?

புதன், 29 நவம்பர் 2023 (10:09 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டிசம்பர் 10 முதல் 21 வரை நடக்க உள்ள ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் அவர் இந்திய அணியில் இணைவார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்