இந்தியா vs தென்னாப்பிரிக்கா… வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்!

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:48 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் சென்ச்சூரியன் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இப்போது வானிலை சரியான நிலையில் இன்னும் 15 நிமிடங்களில் டாஸ் போடப்படும் என தெரிகிறது. இந்த போட்டியின் மூலம் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகாவார் என சொலல்பப்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்