அரசியல் காரணங்களை விளையாட்டில் புகுத்துவது கிரிக்கெட்டின் அறத்துக்கு எதிரானது என இந்திய அணிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றால் அதை மோஷின் நக்வி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் ஆசியக் கிரிக்கெட் வாரியத் தலைவர்) கைகளில் இருந்து இந்திய கேப்டன் சூர்யகுமார் வாங்க மாட்டார் என தகவல் பரவி வருகிறது.