சுனில் கவாஸ்கர் அறிவித்த இந்திய ப்ளேயிங் லெவன் அணி!

சனி, 30 செப்டம்பர் 2023 (13:47 IST)
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி இன்று இங்கிலாந்து அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியை முடிவு செய்வதில் இந்திய அணியின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் மிகப்பெரிய குழப்பம் இருக்கும். காரணம் இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே கடந்த சில போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் அணி
ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்