ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாகும் இளம் வீரர்… அணி அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 25 ஜூன் 2024 (08:09 IST)
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடக்க உள்ளன.

இம்மாத இறுதிவரை இந்த தொடர் நடக்கவுள்ள நிலையில் அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வேக்கு செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், மற்றும் துஷார் தேஷ்பாண்டே.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்