ராயன் படத்தை நான் இயக்கியிருந்தாலும் இவ்ளோ நல்லா வந்திருக்காது… தனுஷைப் பாராட்டிய செல்வராகவன்!

vinoth

ஞாயிறு, 12 மே 2024 (17:18 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய இயக்குனர் செல்வராகவன், “ராயன் படத்தை நான் டப்பிங்கின் போது பார்த்து மிரண்டுவிட்டேன். நான் இந்த படத்தை இயக்கியிருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது.” எனக் கூறியுள்ளார். முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ராயன் படத்தை செல்வராகவன்தான் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்