எனக்கு விருதா?... அவருக்குள்ள கொடுத்திருக்கணும்- ஷாக் ஆன சாம் கரண்

திங்கள், 14 நவம்பர் 2022 (10:10 IST)
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி  விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.  பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19 ஆவது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைபற்றிய சாம் கரண் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதைப் பெற்று பேசிய “எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. இந்த போட்டியின் ஹீரோ பென் ஸ்டோக்ஸ்தான். அவருக்குதான் இதைக் கொடுத்திருக்கணும்” எனப் பேசினார்.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 13 விக்கெட்களைக் கைப்பற்றிய சாம் கரண் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்