கோலிக்கு பதில் ரஜத் படிதாரை எடுத்தது ஏன்?... கேப்டன் ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

vinoth

வியாழன், 25 ஜனவரி 2024 (06:54 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டிக்காக கோலிக்கு பதில் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா கோலிக்கு பதில் ஒரு மூத்த வீரரைதான் அணியில் எடுக்கலாம் என நினைத்தோம் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து படிதாரை எடுத்தது குறித்து பேசிய அவர் “ஆனால் இளம் வீரர்களுகு எப்போது வாய்ப்பளிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுந்தது. அதனால்தான் படிதாரை அணியில் எடுத்தோம். இளம் வீரர்களை நேரடியாக வெளிநாட்டு போட்டிகளுக்கு அழைத்து செல்ல எங்களுக்கு விருப்பமில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்