மோசமான சாதனையோடு 2022 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் ரோஹித் ஷர்மா!

வியாழன், 22 டிசம்பர் 2022 (08:35 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு 2022 ஆம் ஆண்டு சோகமான ஆண்டாக அமைந்துள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ரோஹித் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தோல்வி மற்றும் உலகக்கோப்பை தோல்வி ஆகியவற்றால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனிப்பட்ட முறையிலும் அவரின் பேட்டிங் இந்த ஆண்டு சராசரிக்கும் கீழே அமைந்துள்ளது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் இந்த 2022 ஆம் ஆண்டை நிறைவு செய்கிறார்.

ரோஹித் ஷர்மா கைவிரலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்பதால் அவர் கண்டிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று சமீபத்தைய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இனிமேல் அவர் 2023 ஆம் ஆண்டில்தான் கிரிக்கெட் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்