இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் அணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டியிலாவது ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக நேற்று பயிற்சியிலேயே ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதை இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில்லும் உறுதிப் படுத்தியுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் பண்ட் ஆடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.