நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசும்போது “ஹர்திக் பாண்ட்யா அணியில் இருக்கும்போது இந்திய அணி 12 வீரர்களோடு விளையாடுவது போல. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் தாக்கம் செலுத்தக் கூடியவர். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அவரை இந்திய அணி மிஸ் செய்தது. இன்றைய போட்டியில் அவர்தான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கப் போகிறார். சிறந்த அணி வெல்லும்” எனக் கூறியுள்ளார்.