இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் அனைத்து பவுலர்களும் சிறப்பாக வீசினர். ஆனால் அந்த அணியின் ஸ்டார் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டை எடுத்து 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதற்குக் காரணம் அவருடைய அதிர்ஷ்டம் என்று சொல்கின்றனர். 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட எந்தவொரு இறுதிப் போட்டியிலும் அவர் இடம்பெற்ற அணித் தோற்றதில்லை.