உடல்தகுதியை நிரூபிக்க ஜடேஜாவுக்கு பிசிசிஐ உத்தரவு!

திங்கள், 16 ஜனவரி 2023 (15:00 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா காயம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய ஜடேஜா அதன் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் இப்போது மீண்டும் உடல்தகுதியைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடல்தகுதியை நிருபிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்