சாப்பிட்டது குற்றமா? பிரித்வி ஷாவை சமூக வலைதளங்களில் கேலி செய்யும் நெட்டிசன்ஸ்

திங்கள், 19 அக்டோபர் 2020 (20:50 IST)
நடப்பி ஐபிஎல் தொடரில் அதிக விமர்சனங்களைச் சந்தித்துள்ளவர் டெல்லி அணியின் வீரர் பிருத்வி ஷா.

இவர் 19 வயதுக்குட்டோர் அணியின் உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றிருந்தாலும் நடப்பு தொடரில் ரன்கள் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.  இதையடுத்து அவர் இரவு உணவு உண்டதற்காக சமூக வலைதளத்தில் டிரோல் செய்யப்பட்டார். பின்னர் கடைசிப் போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 180 இலக்கை எதிர்கொள்ள அவர் ஒபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் தீபக் சாஹரை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். பின்பு அவுட் ஆனார். எப்படியோ சுவர் போல் நின்று தவான் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். படேலுன் கைகொடுக்க அணி வெற்றி பெற்றது.

இனி அடுத்து வரும் போட்டியிலானது அவர் கடினமாக உழைக்க வேண்டும் என நெட்டிசன்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்