டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்… ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகம்!

வியாழன், 25 நவம்பர் 2021 (09:14 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கான்பூரில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சற்று முன்னர் நடந்த டாஸில் இந்திய கேப்டன் அஜிங்க்யே ரஹானே வெற்றிபெற்றார். அதையடுத்து அவர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்