அடுத்த டார்கெட் இதுதான்… ஹர்திக் பாண்ட்யாவின் ஆசை இதுதானாம்

திங்கள், 30 மே 2022 (19:40 IST)
ஐபிஎல் கோப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தன் தலைமையில் வென்று கொடுத்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. அவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பார்க்கையில் அவர் தோனியிடம் இருந்து அதிகம் கற்று இருப்பார் என தோன்றுகிறது.” என்க் கூறினார்.

மேலும் “இவ்வளவு கேப்டன்சி திறமை உங்களிடம் இருக்கும் போது இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நான் கண்டிப்பாக ஹர்திக்தான் அடுத்த கேப்டன் என சொல்லமாட்டேன். அதற்கான தகுதியோடு நான்கு பேருக்கு மேல் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரை வென்று கொடுத்துள்ள பாண்ட்யா அடுத்து எப்படியாவது இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து “இந்த முறை என்ன ஆனாலும் சரி. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். என்னிடம் உள்ள அனைத்தையும் அதற்காகக் கொடுக்க போகிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்