மீண்டும் ஐபிஎல் அணியில் பொறுப்பேற்கும் கங்குலி… லேட்டஸ்ட் தகவல்!

செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:50 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவரின் பதவி விலகல் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ தலைவராவதற்கு முன்னர் அவர் சில ஐபிஎல் அணிகளில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்