கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்? கோலி விளக்கம்

சனி, 23 அக்டோபர் 2021 (22:52 IST)
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்துப் பரவி வரும் பல்வேறு விமர்சனங்கள் குறித்து விராட் கோலி பதிலளித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

நீண்டநாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டத்தில்  இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார்., அவரே கேப்டனாகத் தொடர்வாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாவது: உலககோப்பை டி-20 தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு கவனம் செலுத்துவேன்; தேவையற்ற விமர்சனத்திற்கு கவலைப்படமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்