ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ன் கீழ், ஆபாசமான அல்லது அவதூறான மொழியை பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்காக அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.