நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

Siva

வெள்ளி, 3 ஏப்ரல் 2026 (09:20 IST)
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இடையே நடந்த காரசாரமான உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 
 
மைதானத்திலேயே வீரர்களிடம் உரிமையாளர் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதம் குறித்து முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
"நான் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால், கோயங்காவை உடனடியாக தடை செய்து, அவரது அணி உரிமையை திரும்ப பெற்றிருப்பேன்" என்று லலித் மோடி ஆவேசமாக பதிவிட்டுள்ளார். 
 
ஏற்கனவே 2024 சீசனில் கேஎல் ராகுலிடம் கோயங்கா இதேபோல் நடந்துகொண்ட வீடியோ வைரலானதை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற செயல்கள் ஐபிஎல் கண்ணியத்தை குலைப்பதாகக் கூறினார். 
 
மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், லக்னோ நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளதுடன், பண்ட் மீதான தனது நம்பிக்கையை கோயங்கா உறுதிப்படுத்தியுள்ளார். கேமராக்களில் தெரிவது முழுமையான உண்மை அல்ல என்றும், அணிக்குள் இணக்கமான சூழலே நிலவுவதாகவும் லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்