நான் அடுத்த சீசன் ஐபிஎல் விளையாடுவது என் கையில் இல்லை… தோனி சொன்ன காரணம்!

vinoth

சனி, 3 ஆகஸ்ட் 2024 (07:50 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக்  போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள தோனி “அடுத்த சீசன் குறித்து யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. எத்தனை வீரர்களை பிசிசிஐ தக்கவைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமையும். இப்போதைக்கு எங்கள் கையில் எதுவும் இல்லை. அடுத்த சீசனுக்கான விதிமுறைகள் தெரிந்தபின்னர் நான் எனது முடிவை அறிவிப்பேன். அது அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்