நாளைய போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக அஸ்வினை சேர்க்க பரிசீலனை!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:36 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில், இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இந்த லீக் சுற்றுகள் முடிவில் பல  நேபாளம், இங்கிலாந்து, வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின. விதிமீறலில் ஈடுபட்டதாக இலங்கை அணியை ஐசிசி  சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில்,  நாளை மும்பையில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே போட்டி நடைபெறவுள்ளது.

எனவே இதில், சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ரவிசந்திர அஸ்வினை அணியில் சேர்க்க பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

9 லீக் போட்டியிலும் இந்திய வெற்றிப் பெற்றுள்ளளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்