ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.
நடப்பு ஐபிஎல் சீசன் பரபரபாக நடந்து வந்த நிலையில் ப்ளே ஆப் போட்டிகளுக்கான அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள போட்டிகள் நடந்து வருகின்றன. ப்ளே ஆப்க்கு தகுதி பெற்ற முதல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், எலிமினேட்டரில் முதலில் வெளியேறிய அணியான சிஎஸ்கே அணிக்கும் இன்று போட்டி நடைபெற உள்ளது.
புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளது. கடந்த பல போட்டிகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறாத நிலையில் இன்றைய போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்பை கனவை கைவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் வெற்றி பெறுவது குறித்த முயற்சியில் ஈடுபடாமல் தங்கள் அணியில் உள்ள புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதும், அவர்களை அடுத்த சீசனுக்கு பயிற்றுவிப்பதிலும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K