சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்கு சென்றாலும் பென் ஸ்டோக்ஸ் இருக்கமாட்டார்… ஏன் தெரியுமா?

செவ்வாய், 16 மே 2023 (14:13 IST)
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் விளௌயாடவில்லை.

இந்நிலையில் மே 20 ஆம் தேதிக்கு பிறகு அவர் இங்கிலாந்துக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் அடுத்தடுத்து அயர்லாந்து மற்றும் ஆஸி. அணிகளோடு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகளுக்காக டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்