ஆசிய கோப்பை :விராட் அதிரடியால்...... ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு !

வியாழன், 8 செப்டம்பர் 2022 (21:14 IST)
இன்றைய ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி ஆஃப்கானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை இறுதிக்கட்டத்தை  நெருங்கியுள்ள நிலையில், இன்றைய சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் மொகமத் நாமி தலைமையிலான ஆஃப்கான் அணியை கே.ஏல்.ராகுல்  தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆஃப்கான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலி இந்தியா பேட்டிங் செய்கிறது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 எனவே, ராகுல் 62 ரன்களும், விராட் கோலி 122 ரன்களும், யாதவ் 6 ரன்களும், பாண்ட் 20 ரன்களும் அடித்தனர். எனவே இந்திய அணி  2 விக்கெட்டுகள் இழப்பிற்கு  212 ரன்  அடித்து ஆஃப்கானுக்கு213 என்ற  இமாலய இலக்கு நிரணயித்துள்ளது.

ஆஃப்கான் சார்பில் அஹமது மட்டும் 2  விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்