ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் வெற்றி!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (23:41 IST)
இன்றைய ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வரும் நிலையில், இதில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஏற்கனவே இந்தியாவை வீழ்த்தியுள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கும் மோதின.

இன்றைய ஆட்டத்தில்  ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்தது.

இதில் ரிஷான் 14  ரன்களும், அசாம் 30 ரன்களும் நவாஸ் 26 ரன்களும் டடித்தனர்,  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனவே  19.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து இலங்கைக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், நிஷாங்க 55 ரன்களும், ராஜபக்சே 24 ரன்களும், ஷனகா 21 ரன்களும்  அடித்தனர். எனவே இலங்கை அணி மொத்தம் 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்