இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, “இது அவர்களுக்கு மிகவும் நல்லது. வீரர்கள் நினைத்ததை நீதிமன்றம் சரியாக செய்துள்ளது” என்று வங்காள கிரிக்கெட் வாரியத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
மேலும் ஸ்ரீசாந்த் குறித்து கூறிய கங்குலி, “நீதிமன்றம் அவர் மீதான் குற்றச்சாட்டுக்களை அகற்றிவிட்டது. பிசிசிஐ-க்கு இது ஒரு பிரச்சனையாக கருதலாம் என்று நினைக்கவில்லை” என்றார். எனினும் கங்குலி, நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.