கொரோனா எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?

வியாழன், 26 மார்ச் 2020 (14:34 IST)
கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என கணக்கிடப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகெங்கும் 4,00,000 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 20000 பேர் வரை இறக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு 609 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது.   
 
உயிரிழப்பை பொருத்தவரை 13 ஆகவும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்ற கண்க்கீடு வெளியாகியுள்ளது...  
 
# காற்றில் கொரோனா மூன்று மணி நேரம் வரை உயிருடன் இருக்கும், 
# உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிருடன் இருக்கும், 
# குளிர்ச்சியான சூழல்களில் கொரோனா 28 நாட்கள் வரை கூட உயிருடன் இருக்கும், 
# தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மீது நான்கு மணி நேரம் நேரம் வரை உயிருடன் இருக்கும், 
# துணிகள் மற்றும் ஆடைகள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என தெரியவில்லை,
# சரியான நேரம் தெரியவிட்டாலும் மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் கொரோனா உயிர்வாழும் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்