தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர் - மரண பங்கமா கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

புதன், 24 மே 2023 (15:46 IST)
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  
 
பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும்  ஜான்வி கபூர் ஏதாவது செய்து விமர்சனத்திற்கு உள்ளாகுவார். அந்தவகையில் ஏர்போர்ட்டு தலையணை எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக, யம்மா படுக்க பாய் கூட எடுத்துட்டு வந்திடுமா என நெட்டிசன்ஸ் அவரை ட்ரோல் செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்