"ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கிய ஷ்ரத்தா கபூர்" - முன்னணி நடிகைகளின் கதி அரோகதி!

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (20:54 IST)
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் தொடர் வெற்றிப்படங்ககளில் நடித்து முன்னணி நடிகைகளுக்கு இணையாக கிடு கிடுவென உயர்ந்து தனது மார்க்கெட் மவுஸை வெகு விரைவில் உயர்திக்கொண்டவர் நடிகை ஷ்ரத்தா கபூர். 


 
இவர் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள சாஹோ படத்தில்  நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள ஷ்ரத்தா தனது முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக திடீரென சம்பளத்தை உயர்த்தி ரூ.7 கோடி வாங்கியிருக்கிறாராம். இந்த தகவல் கேட்டு டாப் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனராம்.
 
படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் ஹீரோ பிரபாஸும் பட விற்பனையில் பங்கு என்ற பெயரில் ரிலீசுக்கு முன்னரே  ரூ.100 கோடியை தன் பங்காக பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி முன்னணி நடிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்